உடையவர் ராமானுஜர் சந்நிதி நல்ல அதிர்வுகள் கொண்டது. இந்த இடத்தில் அப்படியொரு அமைதி நிலவுகிறது. அங்கே ஐந்து நிமிடம் அமர்ந்து ராமானுஜருக்கு முன்னே, கண்கள் மூடி தியானித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்.
காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான புண்ணிய க்ஷேத்திரம் ஸ்ரீரங்கம் திருத்தலம். மிகப்பிரமாண்டமான ஆலயம். படைப்புக் கடவுளான பிரம்மா, பல்லாயிரம் ஆண்டுகள், திருமாலை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு, பாற்கடலில் இருந்து பெறப்பட்ட ஸ்ரீரங்க விமானம். நான்கு வேதங்களையும் இந்தவிமானத்துக்கு முன்னே ஓதியருளினார் மகாவிஷ்ணு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bfo5ir
via IFTTT