89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சுவாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சுவாமி தரிசனம்

வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் என்றழைக்கப்படும் கோயிலை, வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி, ஆணிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் என இந்த 4 முக்கிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோயில் முழுவதும் வாசனை திரவியத்தால் சுத்தம் செய்வது ஐதீகம். காலம் காலமாக வரும் இந்த வழக்கம், இன்றும் தொடர்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mBNt4h
via IFTTT