நம்மில் பலர் போதிய உடல் உழைப்பு இல்லாமல்,சத்தான உணவு பழக்கம் இன்றி
எலும்பு வலுவின்றி கால்ஷியம் குறைபாடு இவற்றினால் துன்பபடுகின்றனர்.முதுகு வலி,கழுத்து வலி,L4&L5,L5&S1,C4,C5,C6 disc bulge,Disc bulge degenerationdisc degeneration,disc prolapse,etc கஷ்டப்படுகின்றனர்.இதற்க்கு அறுவைச்சிகிச்சை செய்வது ஒன்றே வழி என இருந்த காலம் மாறி இப்போ மக்கள் இயற்கை சிகிச்சை வழியில் குணமடைகின்றனர்.சிகிச்சை முறை பின் வருமாறு
தேவையானவை:
வில்வ இலை- 3
திப்பிலி- 5
பன்னீர் ரோஜா பூ- 1
பனங்கற்கண்டு- 1ஸ்பூன்
நெய்- 1ஸ்பூன்
பிரண்டை- 1 துண்டு
வெற்றிலை- 1 பெரிதாக
நல்லெண்ணை ஊற்றிய அகல் விளக்கு
இதை அம்மி,இஞ்சிக்கல்,மருந்து தயார் செய்ய பயன்படும் கலுவம்(கல்லினால் செய்யப்பட்ட குவளை போன்ற பாத்திரம்) இதில் ஏதேனும் ஒன்றில் வில்வ இலையை நரம்பு நீக்கி விட்டு போட்டு இடித்து கொண்டு பின் அதனுடன் திப்பிலி,பன்னீர் ரோஜா ,பனங்கற்கண்டு சேர்த்து இடித்து எடுக்கவும்.
வெற்றிலையை எடுத்து காம்பு நீக்கிவிட்டு நுனியை கிள்ளி எடுத்துவிட்டு அதன் மேலே நெய் எடுத்து வெற்றிலை முழுவதும் தடவவும்.அதன் மேல் இடித்து வைத்த கலவையை வைக்கவும்.
மண் அகல் விளக்கு எடுத்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றவும்.
பிரண்டையின் மேல் சிறிது நெய் தடவி அதை தீபத்தில் காட்டி சுட்டு எடுத்து வெற்றிலை மருந்து கலவை மேல் முறுக்கி பிழிந்தால் சாறு விழும்.
அப்படியே பீடா போல மடித்து வாயில் போட்டு நன்கு மென்று நிதானமாக விழுங்க வேண்டும். 1 மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடலாம்.
காலை வெறும் வயிறில் மட்டும் இம்மருந்தை சாப்பிடனும்.7 நாள் சாப்பிட்டால் போதும்.