89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குடியிருக்கும் வீடு நமக்கு ஏற்றதுதானா என்பதை அறிந்துக்கொள்ள உதவும் எளிய வழி

குடியிருக்கும் வீடு நமக்கு ஏற்றதுதானா என்பதை அறிந்துக்கொள்ள உதவும் எளிய வழி

நாம் குடியிருக்க போகும் இடம் நமக்கு உகந்த இடம் தானா என அறிந்து அங்கே போய் வாழ நினைப்பது மிக சரியானது.அதற்கு இன்றைய காலத்தில் பல நவீன உத்திகள் இருக்கின்றன.அதற்கு நாம் பணம் செலவு செய்ய வேண்டும்.வசதி இருப்பவர்கள் எப்படி வேணுமென்றாலும் செலவு செய்து சரி பண்ணிக்கொள்வார்கள்.
வசதி குறைவாக உள்ளவர்களால் அப்படி செய்ய முடியாது அல்லவா.
பிற்க்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை முன் கூட்டியே நம் முன்னோர்கள் சொல்லி அதற்க்கு தீர்வு முறைகளும் சொல்லி உள்ளனர்.அவற்றில் ஒன்றுதான் இது.குற்றமில்லா மனை பற்றி அறிவது.
அதற்கு பெயர் குழி நீரின் குறை நிறை காணல்.நாம் செய்யவேண்டியது 





என்னவெனில் மனையில் ஒரடி சதுர குழி தோண்டி 

மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் போது அந்த குழியில் நிரம்ப நீர் விட வேண்டும். 

அதிகாலை சூரியன் உதிக்கும் போது. வந்து குழியை கனிக்கவேண்டும். நீர் சற்று குறைந்தாலும்,குறையாமல் இருந்தாலும் உத்தமமான பலன்களை சொல்லலாம்.

நீர் பாதி வற்றி இருந்தால் வீடு கட்டி முடியும் வரை. பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
நீரெல்லாம் வற்றிப்போயிருந்தால் தீய பலன்களே உண்டாகும்.
நீர் முழுவதும் வற்றி போய் குழி வறண்டிருந்தாலும் குழியின் உட்புற தரை வெடிப்புகள் கண்டிருந்தாலும் வாழ் நாள் முழுவதும் நோய் நொடி,வறுமை இவற்றோடு வாழ வேண்டி இருக்கும்.எனவே அது போல் மனையில் வீடு கட்டி குடி போவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.