ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நேற்று இரவு பெரிய பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். கருட சேவையையொட்டி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கோயிலுக்கு திருக்குடை வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபெருங்கோயிலுடையான் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் கருட சேவையையொட்டி நேற்று இரவு பெரிய பெருமாள் தங்க கருட வாகனத்திலும், பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d97QiM5
via IFTTT