திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நேற்று சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். வாகன சேவைகளில் 16 மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 6-ம் நாள் தங்க ரத ஊர்வலம், 8-ம் நாள் தேரோட்ட நிகழ்ச்சியிலும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vD3YQgE
via IFTTT