நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன், பொருளாதாரத்தில் மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் தன்னை உயர்த்திக் கொண்டு இறைவனுடன் கலக்க வேண்டும். இந்த மனித பிறப்பின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கும் பொருட்டே ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம். அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.
முதல் படியில் ஓரறிவு உள்ள உயிர்பொருட்களை (புல், செடி, கொடி) உணர்த்தும் பொம்மைகளையும், இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகளையும், மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு பொம்மைகளையும் வைக்க வேண்டும், நான்காவது படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்கு பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மகரிஷிகளின் பொம்மைகள், எட்டாவது படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலர்களின் பொம்மைகள், ஒன்பதாவது படியில் பிரம்மா, சிவன் போன்ற தெய்வ பொம்மைகளை வைக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n6vTwgY
via IFTTT