திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வெண்பட்டு திருக்குடைகளை, இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, ஏழுமலையானுக்கு இன்று (அக்.7) சமர்ப்பித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது தமிழகத்தில் இருந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் மங்களப் பொருட்களில், சென்னையில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனையுடன் சமர்ப்பிக்கப்படும் வெண்பட்டு திருக்குடைகளும் ஒன்று. 250 ஆண்டுகளாக இந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. இந்த திருக்குடைகள், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவையில், மலையப்ப சுவாமி வீதிஉலா வரும்போது சாற்றப்படுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OWx8T2Q
via IFTTT