திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவத் தின் 4-ம் நாளாக நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து மாலையில் திருமஞ்சன சேவை நடைபெற்றது. இரவு, சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலை யப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1gsLjrp
via IFTTT