புதுடெல்லி: 'சித்தா' மருந்துகளின் கலவை வளரிளம் பெண்களின் ரத்த சோகையைக் குறைப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது சுகாதார முன்முயற்சி (பி.எச்.ஐ) ஆராய்ச்சியாளர்களால் புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய அறிவு இதழில் (ஐ.ஜே.டி.கே) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், சித்த மருந்துகளின் கலவை வளரிளம் பருவத்து பெண்களிடையே ரத்த சோகையைக் குறைக்கிறது என்று கூறுகிறது. ரத்த சோகையைக் குறைப்பதில் 'சித்தா' மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YnxFLOW
via IFTTT