89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

கடலூர்: சிதம்பரத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்திட நடராஜர் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு தொடர் முழக்க போராட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

சைவ - வைணவ பாகுபாட்டை கைவிட்டு தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டுமென்று வலியுறுத்தி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று 3-ம் கட்ட போராட்டமாக சிதம்பரம் ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில் 1008 முறை நமோ நாராயணா, ஓம் நமச்சிவாயா என்று கூறி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vJtFk0j
via IFTTT