பெங்களூரு: சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்பு பெங்களூரு மறைமாவட்டத்தின் துணை ஆயராக தமிழரான அருட்தந்தை ஜோசப் சூசைநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ் கிறிஸ்துவ மற்றும் பட்டியலின அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் கிறிஸ்துவர்களாக இருந்தபோதும், கிறிஸ்துவ மதநிர்வாக‌ அமைப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத நிலை நீடித்து வருகிறது. தமிழில் வழிபாடு செய்வதற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SQPGVvU
via IFTTT