89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘மன்னிப்பாயா அன்பே!’ - சீன் நதியில் திருமண மோதிரத்தை தவறவிட்ட ஒலிம்பிக் வீரர்

‘மன்னிப்பாயா அன்பே!’ - சீன் நதியில் திருமண மோதிரத்தை தவறவிட்ட ஒலிம்பிக் வீரர்

பாரிஸ்: காதல் கவித்துவமானது என்பதை பல்வேறு காவியங்கள் நமக்கு சொல்லியுள்ளன. அதில் புதுவரவாக இணைந்துள்ளார் இத்தாலி நாட்டின் தடகள வீரர் ஜியான்மார்கோ தம்பேரி. கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது திருமண மோதிரத்தை சீன் நதியில் அவர் தவற விட்டுள்ளார். அதை எண்ணி எண்ணி ஏங்கிய அவர் தனது காதல் மனைவிக்காக உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், “அன்பே... என்னை மன்னிக்கவும். விளையாட்டு உலகின் மிக முக்கிய நிகழ்வான ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இத்தாலியின் மூவர்ண கொடியை என்னால் இயன்றவரை உயர்த்தி பிடிக்க விரும்பினேன். அந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக என் விரலில் இருந்த மோதிரம் அப்படியே பறந்து சென்றது. அதை நான் பார்த்தேன். எப்படியும் படகின் உள்பக்கம் விழும் என்று தான் நினைத்தேன். ஆனால், அது மறுபக்கம் விழுந்துவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/toPnmsE
via IFTTT