89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவு முதல் மதுரையில் புத்தக காட்சி

புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவு முதல் மதுரையில் புத்தக காட்சி

மதுரை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவை வளர்க்கும் விதமாக மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், கடந்த 29 ஆண்டுகளாக புத்தக காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய புத்தக காட்சி விடிய, விடிய நடக்கிறது. 10 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 200 தலைப்புகளில் அரசியல், பொருளாதாரம், தத்துவம், கலை, இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்ளிட்ட புதிய புத்தகங்கள் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KXiIbpk
via IFTTT