89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘மெட்ராஸ் ஐ' பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? - மருத்துவரின் ஆலோசனைகள்

‘மெட்ராஸ் ஐ' பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? - மருத்துவரின் ஆலோசனைகள்

சென்னை: ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் (கன்சங்டிவிடிஸ் - Conjunctivitis) முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால், இந்த நோய்க்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருப்போம். காலநிலை மாற்றம் காரணமாக உருமாறும் வைரஸ்கள் பரவலால், சில காலம் அடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஐ’ திரும்பவும் பரவ வேகமெத்துள்ளது. இதனால் சமீபமாக மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவர் வினீத் ராத்ரா கூறும்போது, “கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்கள் சிவத்தல், நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், ‘மெட்ராஸ் ஐ’ பரவலைத் தடுக்கும் வழிமுறைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HSL9247
via IFTTT