89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயில் திருத்தேரோட்டம்

4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயில் திருத்தேரோட்டம்

கும்பகோணம்: அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோயிலில் கடந்த 1-ம் தேதி முன்னை முதல்வன் வழிபாடும் திருமண எடுத்ததலும், 2-ம்தேதி ஐம்பெரும் கடவுளர்கள் காட்சியும், கொடியேற்றம் நடைபெற்றது. 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பல்வேறு வாகனங்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (6-ம் தேதி) காலை திருக்கார்த்திகையை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் பக்தர்கள் அரோகரா அரோகரா என வடம் பிடித்து 4 வீதிகள் வழியாக தேர் நிலைக்கு இழுத்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bHudjVs
via IFTTT