89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சபரிமலையில் 10 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஐயப்ப சேவா சங்கம்

சபரிமலையில் 10 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஐயப்ப சேவா சங்கம்

மதுரை: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் மண்டல காலத்தில் நவ, 16 முதல் டிச.27-ம் தேதி வரைசுமார் 10 லட்சம் பேருக்கு 3 வேளை அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகர விளக்கு கால பூஜையையொட்டி டிச. 30 முதல் ஜன. 19-ம் தேதி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உடல் நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்களை உடனே அருகிலுள்ள பம்பா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 628 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்னதானத்துடன் மூலிகைக் குடிநீர், புண்ணிய பூங்காவனம் மற்றும் பவித்ரா சபரிமலை சேவைகளில் 1,064 அகில பாரத ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் ஈடுபட்டனர். தமிழக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கேரள காவல் துறை உயரதிகாரிகள், தேவஸம் போர்டு, விஜிலென்ஸ் அதிகாரிகள் என முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q60ltw8
via IFTTT