89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : FIFA WC 2022 | நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ: புதுச்சேரியில் பேனர் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

FIFA WC 2022 | நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ: புதுச்சேரியில் பேனர் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

புதுச்சேரி: கத்தார் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இப்போது இந்தத் தொடரில் குரூப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பை வெல்லும் கனவை விரட்டி வருகின்றன. மறுபக்கம் அந்தந்த அணியின் ஆதரவாளர்கள், ரசிகர்கள், அபிமானிகள் என பலரும் தங்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்திய கால்பந்தாட்ட அணி இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடவில்லை. ஆனாலும், இந்திய கால்பந்தாட்ட ரசிகர்கள் தங்கள் அன்பை ‘சின்ன, சின்ன’ செயல்கள் மூலம் வழிகாட்டி வருகின்றனர். வழக்கமாக கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் இருக்கும் கேரளா, கொல்கத்தா, கோவா போன்ற பகுதிகளில் ரசிகர்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ueXHTcP
via IFTTT