89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி யானை சின்னம் பொறித்த கொடியேற்றத்துடன் தொடங்கியது.

4-ம் நாளான நேற்று காலையில் ராஜமன்னார் அலங்காரத்தில் தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையில் காளை, குதிரை, யானை பரிவட்டங்கள் முன்னே செல்ல, ஜீயர்கள் திவ்ய பிரபந்தத்தை பாடியபடி சென்றனர். ஆந்திரா உட்பட பிற மாநில நடன கலைஞர்கள் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்களை ஆடியபடி முன் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இரவு ஹனுமன் வாகனதில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IvZczJd
via IFTTT