89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சேலத்தில் 80 ஆண்டுகள் கழித்து உலாவிய அதிசய பறவை - ஆர்வலர்கள் வியப்பு

சேலத்தில் 80 ஆண்டுகள் கழித்து உலாவிய அதிசய பறவை - ஆர்வலர்கள் வியப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் இந்தியக் கல்கவுதாரி (பெயின்டட் சாண்டுகிரவுஸ்) என்னும் அரிய வகைப் பறவை, கடந்த 80 ஆண்டுகள் கழித்து உலாவி வருவதை பறவையியல் கழகத்தினர் கண்காணிப்பு பணியின் மூலம் கண்டறிந்து வியப்படைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பறவையினங்கள் கணக்கெடுப்பு பணியில் பறவையியல் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து பல வகையான பறவையினங்கள் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. சேலம் மூக்கனேரி, மேட்டூர் நீதிபுரம் ஏரி, தலைவாசல் ஏரி உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளிலும், சேர்வராயன் மலைத் தொடர்களிலும் காலச்சூழலுக்கு தக்கவாறு அயல் வாழ்விட பறவையினங்கள் புகழிடம் தேடி வந்து செல்வது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qm4vz5g
via IFTTT