89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மழை விடுமுறை: 2கே கிட்ஸின் அலப்பறைகளும், 90ஸ் கிட்ஸின் காத்திருப்பும்! 

மழை விடுமுறை: 2கே கிட்ஸின் அலப்பறைகளும், 90ஸ் கிட்ஸின் காத்திருப்பும்! 

தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டால் குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாட்டத்திற்கு முக்கியக் காரணம் பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு. தங்களது பகுதியில் மழை பெய்யத் தொடங்கிவிட்டாலே "சாமி நாளைக்கு ஸ்கூலுக்கு லீவு விடணும்" என்று கடவுளை வேண்டுவதும், லீவு விட்ட பிறகு “ஹய்யா ஜாலி” என்று துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதிலும் அனைத்து கிட்சுகளும் ஒன்றாகதான் உள்ளனர்.

ஆனால், இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அறிந்துகொள்ள ட்விட்டரையும், இன்ஸ்டாகிராமையும் அதகளப்படுத்தி வருகின்றனர் இந்த 2கே கிட்ஸ். மழை பெய்ய தொடங்கியமே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர்களை டேக் செய்து வடிவேலு பாணியில், "லீவு எப்ப சார் வீடுவீங்க" என்று கேட்கத் தொடங்கி விடுகின்றனர் 2கே கிட்ஸ்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cXTIQVJ
via IFTTT