89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தீர்வுகள் | உலக மூட்டு நோய் தினம் சிறப்புப் பகிர்வு

மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தீர்வுகள் | உலக மூட்டு நோய் தினம் சிறப்புப் பகிர்வு

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி உலக மூட்டு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பிசியோதெரபி மருத்துவரும், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க மாநில பொதுச்செயலாளருமான டாக்டர் ராஜேஸ் கண்ணா கூறியதாவது:

மூட்டு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளின் முனைகள் இணையும் பகுதியாகும். இது ஜவ்வால் இணைக்கப்பட்டு, தசைகளால் வலுவூட்டப்பட்டிருக்கும். இவை ஒன்றோடொன்று உரசாமல் இருக்க மூட்டு திரவம் உள்ளது. இது எலும்புகள் தேயாமல் இருக்க உதவுகிறது. ஆனால், இந்த திரவமானது 60 வயதுக்குமேல் குறையத் தொடங்குகிறது. அப்போது, முழங்கால் மூட்டு, எலும்புகளில் உராய்வு ஏற்பட்டு, எலும்புகள் தேயத் தொடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0Unljdq
via IFTTT