89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் மக்கள் வெள்ளத்தில் நடந்த சூரசம்ஹாரம்

2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் மக்கள் வெள்ளத்தில் நடந்த சூரசம்ஹாரம்

தூத்துக்குடி/ திருநெல்வேலி/ தென்காசி/ கோவில்பட்டி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிய தொடங்கினர். அங்கு நேற்று காலை முதலே வெயில் இல்லாமல் இதமான சூழ்நிலை காணப்பட்டது.

இதனால் காலை முதலே பக்தர்கள் கடற்கரைக்கு வந்து சூரசம்ஹாரத்தை காண இடம்பிடித்து காத்துக்கிடந்தனர். மதியத்துக்கு மேல் கடற்கரையில் கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கிய போது லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். கடற்கரையெங்கும் மனித தலைகளாகவே காட்சியளித்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RLgBGOt
via IFTTT