89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு...’ - அப்துல் கலாமின் கவனத்துக்குரிய 10 மேற்கோள்கள்

‘உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு...’ - அப்துல் கலாமின் கவனத்துக்குரிய 10 மேற்கோள்கள்

இந்தியாவின் மறக்க முடியாத குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மாணவர்களின் தலைவராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். வறுமையான சூழலிலும் படிப்பை கைவிடாது பிடித்துக்கொண்ட அப்துல் கலாம் விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் படித்தார்.

1960-ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சியை தொடங்கிய அப்துல் கலாமின் பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான இஸ்ரோ வரை தொடர்ந்தது. ரோகிணி 1 ஏவுகணை, பொக்ரான் சோதனை போன்றவற்றை முன்னின்று நடத்தி நாட்டிற்கு பெருமை சேர்ந்தார். 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட அப்துல் கலாம் மக்களின் கொண்டாட்டத்துக்குரிய குடியரசுத் தலைவராக பணியாற்றினார். அத்தகைய ஆளுமையின் சிறந்த 10 மேற்கோள்கள்...



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MmTv3iW
via IFTTT