1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக கவிஞர். அரபு கவிஞர்களில் மிகவும் பிரபலமானவர் ரூமி. இந்திய அமீர் குஸ்ரோவின் (1253-1325) காலத்தை சேர்ந்தவர் ரூமி.
ரூமி தனது படைப்புகளை தனது 50 ஆம் வயதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறார்.இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. எனினும் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். ரூமியின் கவிதைகள் உலகின் பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gi0UJQp
via IFTTT