புதுச்சேரி: “நம்மிடம் அளப்பரிய தமிழ் இலக்கியங்கள், படைப்புகள் இருந்தாலும், அவை உலகரங்கில் கவனம் பெறவில்லை” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நல்லி - திசை எட்டும் 19-வது ஆண்டு மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா, குறிஞ்சிவேலன் முத்து விழா மற்றும் ழொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி ராமகிஷ்ண மடம் தலைவர் ஆத்மகணானந்த மகராஜ் நல்லி-திசை எட்டும் விருதுகளை வழங்கி பேசினார். ஆயிஷா. இரா.நடராஜன் (ஆங்கிலம்-தமிழ்), வெங்கட சுப்புராய நாயக்கர் (தமிழ்-பிரெஞ்சு), கண்ணையன் தட்சிணாமூர்த்தி (தமிழ்-ஆங்கிலம்), ஷைலஜா ரவீந்திரன் (தமிழ்-மலையாளம்) ஆகியோர் மொழியாக்க விருது பெற்றனர். குறிஞ்சிவேலனின் ஆவணப் படத்தை திரைப்பட இயக்குநர், நடிகர் பொன்வண்ணன் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வால்மீகி தர்மம், தம்மபதம்-பவுத்தமத அறநூல், தி குறள் (The kural ஆங்கிலம்-தமிழில்), முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x9rWy7J
via IFTTT