சென்னை: தனது தினசரி சம்பாத்தியத்தை குடில் ஒன்றில் அமர்ந்தபடி நிதானமாக எண்ணி சரிபார்க்கும் மூத்தக் குடிமகன் ஒருவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோ நெட்டிசன்களின் நெஞ்சத்தை உருகச் செய்யும் வகையில் உள்ளது. அதற்கு ஏராளமான லைக்குகளும் குவிந்துள்ளன.
இன்றைய நவீன உலகில் நம்மைச் சுற்றி பல்வேறு கன்டென்டுகள் வலம் வந்து கொண்டுள்ளன. அதில் சிலவற்றை போற போக்கில் அப்படியே கடந்து செல்லும் வகையில் இருக்கும். சில கன்டென்டுகள் சில நிமிடங்கள் நின்று கவனிக்கும் வகையில் இருக்கும். அதில் இரண்டாவது வகைதான் சமூக வலைதளங்களில் உலவும் நெட்டிசன்களின் கவனத்தை பெறும். ‘அது! இது!’ என குறிப்பிட்டு சொல்ல முடியாது. குழந்தையின் அழுகை, சிரிப்பு என அதில் உணர்ச்சிகள் ஊற்றெடுத்து பெருகி வழியில் வகையில் இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NHtZgcP
via IFTTT