நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு, பேராலயத்தை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் சென்று கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், கொடியை புனிதம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டதும், பக்தர்கள் மாதாவைப் போற்றி முழக்கமிட்டனர். அதன்பின், வாண வேடிக்கை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியால் ஜொலித்தது.
கொடியேற்ற விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபரும் பங்குத்தந்தையுமான அற்புதராஜ் அடிகளார் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q3LD7a2
via IFTTT