மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதைப்பந்து விநாயகர் சிலைகள் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனை காலம் முடிந்து, விடுதலையாகும் போது, அவர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிறை வளாகத்திற்குள் பல்வேறு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் பூந் தொட்டிகள், சிமெண்ட் கிராதிகள், மருத்துவ பேண்டேஜ், இனிப்பு வகைகள் போன்ற பொருட்களை கைதிகள் தயாரிக்கின்றனர். இப்பொருட்கள் சிறைத்துறை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lhsRADW
via IFTTT