மதுரை: சொந்த ஊரில் ஆட்டுப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்டி வருகிறார் வாடிப்பட்டி பட்டதாரி ராஜவடிவேல். இவர் சுய வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பயிற்சிக்களமாகவும் பண்ணையை மாற்றியுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜவடிவேல் (வயது 52). எம்.காம், எம்பிஏ பட்டதாரியான இவர் எத்தியோப்பா நாட்டில் ஆயத்த ஆடைகள் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றினார். கை நிறைய சம்பளம் வாங்கியவர் கடந்தாண்டு சொந்த ஊருக்கு திரும்பியவர், விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் விவசாயம் செய்ய தொடங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cFZygLY
via IFTTT