89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கும்பகோணம் காதல் தம்பதி படுகொலையை எப்படி ‘குறிப்பிடுவது’? - ஒரு கேள்வி எழுப்பும் சிந்தனை

கும்பகோணம் காதல் தம்பதி படுகொலையை எப்படி ‘குறிப்பிடுவது’? - ஒரு கேள்வி எழுப்பும் சிந்தனை

ஆணவப் படுகொலை கொலைகளில் சாதி என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே சமூகச் செயற்பாட்டாளர்களும் முற்போக்கு இயக்கங்களும் தூக்கிப் பிடித்தனர். ஆனால், இதற்குள் தந்தைவழிச் சமுதாயத்தின் குடும்ப ஆதிக்கம் வகிக்கும் பாத்திரத்தை ஏனோ பலரும் பேச முன்வரவில்லை.

சாதி மட்டும் காரணமா?: குடும்பம் காதலை எதிரியாகப் பார்க்கிறது. பிள்ளைகளின் சுயேச்சையான முடிவை அத்துமீறலாகப் பார்க்கிறது. எந்தச் சாதி ஆணவப்படுகொலையும் குடும்பத்தினரின் முதன்மையான பங்களிப்பின்றி நிறைவேறவில்லை. ஆனால், சாதியை எதிர்க்கிற நாம் குடும்பம் என்கிற அமைப்பைக் கேள்வி கேட்கவோ அதன் அமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று கோரவோ தயாராக இல்லை. சொந்த மாமன் மகனைக்கூடத் தன் விருப்பத்துக்கு மாறாகக் கட்டினால் மகளை வெட்டிப்போடத் தகப்பன் தயாராக இருக்கும் அமைப்புதான் குடும்பம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0un1gGc
via IFTTT