மனமகிழ்ச்சி தரும் பழம்: பப்பாளிப் பழச் சதைகளைப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து 'ஸ்மூத்தி' போல மாலை வேளைகளில் குடித்து வரலாம். உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை வழங்குவதுடன் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். மாதவிடாய் பிரச்சனை உடையவர்கள் பப்பாளிப் பழத்தை தங்களது உணவுப் பட்டியலில் இணைத்துக் கொள்வது நல்லது.
பப்பாளி சர்பத்: எலுமிச்சை, நன்னாரி கொண்டு சர்பத் தயாரிப்பதைப் போல, பப்பாளிப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்பத் சில நாடுகளில் பிரபலம். பழத்தைக் கொண்டு பச்சடி, ஜாம் போன்ற உணவுப் பொருட்களையும் உருவாக்கலாம். தேங்காய்த் துருவல் மற்றும் பப்பாளியோடு பனைவெல்லம் சேர்ந்த காம்போ, நாவின் எச்சில் சுரப்பை அதிகரிக்கும். பப்பாளிப் பழத்தோடு உருளைக் கிழங்கு சேர்த்தரைத்து 'கட்லட்' போலச் செய்த பின், புதினா சட்னியைத் தொடு உணவாக வழங்க, பசி அதிகரித்து, உடல் ஊட்டம் பெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V4PK16n
via IFTTT