ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் சிறப்புமிக்க தொண்டை மண்டத்து திவ்ய தேசமாகத் திகழ்வது காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயில். இது காஞ்சி மாநகரத்தின் கீழ்க்கோடியில் சிறப்புற அமைந்துள்ளது.
உயர்ந்த கோபுரங்களும் நெடிதுயர்ந்த மதில்களும் அவற்றின் நடுவே விளங்கும் புண்ணியகோடி விமானமும் வெகுதூரத்தில் இருந்தே நமக்கு காட்சி நல்குகின்றன. இவ்விமானத்தின் கீழ் அஸ்திகிரி என்னும் சிறு மலையின் மேல் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i295TvQ
via IFTTT