89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏழுமலையானின் தாயார் வகுலமாதா கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

ஏழுமலையானின் தாயார் வகுலமாதா கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருப்பதி: ஏழுமலையானின் தாயார் வகுலமாதாவுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ளது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்கிறார்.

திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்பு தாயாக அழைக்கப்படுபவர் வகுலமாதா. இவருக்கு திருப்பதி அடுத்துள்ள பேரூரு பகுதியில் ஒரு மலை மீது கோயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இக்கோயிலை புதுப்பிக்க பல விவாதங்கள் எழுந்தன. தற்போது ஆந்திர மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி முன்வந்து, அவரது சொந்த செலவில் கோயிலை புதுப்பித்து அதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n1clV3L
via IFTTT