89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஊட்டமேற்றப்பட்ட அரிசி: முரண்பாடுகளும் தீர்வுகளும் - ஒரு விரைவுப் பார்வை

ஊட்டமேற்றப்பட்ட அரிசி: முரண்பாடுகளும் தீர்வுகளும் - ஒரு விரைவுப் பார்வை

அனைத்து ஏழைகளுக்கும் 2024-க்குள் ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட உள்ளதாகப் பிரதமர் மோடி கடந்த சுதந்திர நாளன்று அறிவித்தார். மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்குத் தீர்வாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த ஊட்டமேற்றப்பட்ட அரிசியில் எந்த அளவில் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும் என்கிற வகையில் அதிலுள்ள ஆபத்துகளும் முரண்பாடுகளும் அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

நமது உடலில் நொதிகளும் ஹார்மோன்களும் சுரப்பதற்கு நுண்ணூட்டச் சத்துகளே உதவுகின்றன. அந்த வகையில் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துகளை உணவு தானியங்களில் கலந்து, அவற்றின் மூலம் மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க முயல்வதே ஊட்டமேற்றப்பட்ட அரிசிக்கான அடிப்படை. இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம், வைட்டமின்கள் ஏ, பி-1, பி-2, பி-3, பி-6, பி-12 ஆகியவற்றை ‘Extrusion’ எனும் நடைமுறை மூலம் தானியங்களில் கலந்து ஊட்டமேற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Aw8f3gW
via IFTTT