புதுடெல்லி: வேக்ஃபிட் சொல்யூஷன் என்ற இந்திய நிறுவனம் தனது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனி தினமும் அலுவலக வேலை நேரத்தில் அரை மணி நேரம் தூங்குவதற்கான நேரம் என அறிவித்துள்ளது.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும் என்பார்கள். மதிய உணவுக்கு பின்பு வரும் ஒரு குட்டித் தூக்கத்தை எல்லோரும் உணர்ந்திருப்போம். அந்த நேரத்தில் தேநீரோ, காபியோ குடிப்பது ஒன்றே அதனைச் சமாளிக்க இருக்கும் ஒரே வழி. இந்த நிலையில், வேக்ஃபிட் சொல்யூஷன் தனது ஊழியர்கள் அனைவரும் இனி தினமும் அரைமணி நேரம் அலுவலகத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/70TIfLg
via IFTTT