89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு 

திருச்சி, திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூதங்களில் நீருக்குரிய தலமாக விளங்குவது திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் பங்குனிப் பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா பிப்.22-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eK64e3
via IFTTT