பங்குனி உத்திர நன்னாளில் விரதம் மேற்கொள்வது மிக எளிமையானது. அதேசமயம் ஈடில்லாத வரங்களைத் தரக்கூடியது. இந்த நன்னாளில், அன்னதானம் செய்வதும் மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கடவுளர்களை பூஜிப்பதற்கும் தரிசிப்பதற்குமான சிறந்த மாதங்களில் பங்குனி மாதமும் உண்டு. பங்குனி மாதம் என்பது வழிபாடுகளுக்கான மாதம். பங்குனி மாதம் என்பது சிவனாருக்கும் அம்பாளுக்கும் உரிய மாதம். இந்த மாதத்தில் முருக வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tStke6
via IFTTT