பங்குனி புனர்பூச நன்னாளில் நந்திதேவருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். அன்றைய நாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவருக்கு அருகம்புல்லும் செவ்வரளியும் சார்த்தி வேண்டிக்கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சிவபெருமானின் வாகனமான நந்திதேவரைத்தான் ஆலயத்தில் நுழையும்போது முதலில், பிரதானமாகத் தரிசிக்கலாம். முக்கியமான விழாக்களிலும் பிரதோஷ பூஜைகளிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் ஆலய விழாக்களிலும் நந்திதேவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rcY4oF
via IFTTT