மாங்கல்ய பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் மஞ்சள் குங்குமம் நிலைக்க வேண்டும் என்றும், வாராக் கடன் வசூலாக வேண்டும் என்றும் குடும்பப் பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றும் பிரிந்த தம்பதி சேர வேண்டும் என்றும் திருமண யோகம் கிடைக்க வேண்டும் என்றும் நங்கையார் அம்மனை வேண்டிக்கொண்டால், அதை அருளும் கருணையும் பொங்க உடனே நிறைவேற்றிக் கொடுப்பார்கள் அம்மனும் சப்தமாதர்களும்!
திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ளது மணக்கால். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் கிராமம். இந்த ஊரில், கோயில் கொண்டிருக்கிறாள் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன். பங்குனி மாதத்தில், சப்தமாதரை வணங்கினால் மங்கலங்கள் பெருகும்; மங்காத புகழும் செல்வமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r4fweH
via IFTTT