மாசி வெள்ளிக்கிழமையில் ராகுகால வேளையில் வழிபாடு செய்வோம். துர்கைக்கு தீபம் ஏற்றுவோம். துக்கத்தையெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி.எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். செவ்வரளி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வோம். மங்காத செல்வங்களைத் தந்தருள்வாள். துக்கத்தையும் வாட்டத்தையும் போக்கி வாழ்க்கையை மலரச் செய்வாள் துர்காதேவி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது கலைகளைக் கற்றறிவதற்கான மாதம். மாசி மாதம் என்பது கல்வியில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படித்து முன்னுக்கு வருவதற்கான காலம். மாசி மாதத்தில் வருகிற மகம் சிறப்பு வாய்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qgpDwM
via IFTTT