பங்குனிச் செவ்வாயில், அழகன் முருகனை ஆராதிப்போம். தரிசித்துப் பிரார்த்திப்போம். பங்குனிச் செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று கண்ணாரத் தரிசிக்கலாம். செவ்வரளி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளலாம். பங்குனிச் செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம். அல்லல்களையெல்லாம் தீர்த்து வைப்பான் முத்துக்குமரன்!
பங்குனி மாதம் குளிரெல்லாம் முடிந்து கோடைக்குத் தயாராகும் மாதம். நீர்ப்பிடிப்புடன் இருக்கும் பூமியெல்லாம் வெப்பத்தால் இளகி, மண்ணும் நீருமாக பூமிக்குள் நிறைந்திருக்கும் மாதம். பங்குனி மாதத்தில்தான் பால் குடம் ஏந்தியும் அம்மனுக்கும் முருகனுக்கும் பாலபிஷேகம் செய்தும் வணங்கி வழிபடுவார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vs9kRh
via IFTTT