சிவபெருமானின் அம்சமாகவும் சிவனாரில் இருந்து வெளிப்பட்டவராகவும் பைரவரை விவரிக்கின்றன புராணங்கள். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவரை அனைத்துச் சிவாலயங்களிலும் தரிசிக்கலாம்.
எல்லா சிவாலயங்களிலும் பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. இவரை பெரும்பாலும் போகிறபோக்கில் தரிசித்துவிட்டு வந்துவிடுகிறோம். அம்பாள் சந்நிதியிலும் சிவனாரின் சந்நிதியிலும் மெய்யுருகி வேண்டிக்கொள்வதைப் போல, பைரவர் சந்நிதியிலும் வேண்டிக்கொள்ளவேண்டும், பைரவரையும் மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rpprvQ
via IFTTT