அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் பெருமானை தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளுக்கு அர்ச்சித்து வணங்கி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது அனகாபுத்தூர். இங்குதான், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅகத்தீஸ்வரர். அற்புதமான திருத்தலம் என்று போற்றப்படுகிறது அகஸ்தீஸ்வரம் திருக்கோயில்.
சிவனாருக்கும் உமையவளுக்கும் திருமணம் நடைபெற்ற போது, தென் பகுதி உயர்ந்தது. வடபகுதி தாழ்ந்தது என்கிறது புராணம். சிவனாரின் திருமண வைபவத்தைத் தரிசிக்க வந்த கூட்டத்தால், இப்படியானதாக விவரிக்கிறது புராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rvIODP
via IFTTT