வெள்ளூரில் காமேஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் மகாலக்ஷ்மி அபூர்வமானவள். வில்வ ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி என்று சொல்லும் இந்த தாயாரை, வெள்ளிக்கிழமைகளில் பதினாறு முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி!
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோயிலை அடுத்துள்ளது வெள்ளூர். முசிறிக்கு முன்னதாகவே உள்ளது இந்த வெள்ளூர் திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருக்காமேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீசிவகாமசுந்தரி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oSwzzq
via IFTTT