வல்லம் ஏகெளரியம்மனை பஞ்சமி திதியில் தரிசிப்பது சிறப்புக்கு உரியது. அதேபோல், செவ்வாய்க்கிழமையும் பஞ்சமியும் இணைந்த நாளிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசித்து மனமுருகப் பிரார்த்தனை செய்தால், நம்மையும் நம் இல்லத்தையும் நம் வம்சத்தையும் வாழ்வாங்கு வாழச் செய்வாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் கோயில். தஞ்சாசுரன் எனும் அரக்கனைக் கொன்று ஒழித்தவள் இவள்தான் என்கின்றன புராணங்கள்.
அதுமட்டுமா? தஞ்சாசுரனை அழித்த தலம் என்பதால்தான் அந்த ஊர் தஞ்சாவூர், தஞ்சை என்றானதாகவும் சொல்லப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OuwOEb
via IFTTT