சிவ வழிபாடு என்பது சிந்தையில் தெளிவைத் தரும். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறது சிவ புராணம். சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.
சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியவை. சித்தமெல்லாம் சிவமயம் என்பார்கள் சிவனடியார்கள். முக்தி கிடைக்க, சிவமே கதியென்பார்கள்.
மாத சிவராத்திரியில், சிவ வழிபாடு செய்யலாம். நமசிவாய மந்திரம் சொல்லி சிவலிங்கத் திருமேனியை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது, பீடைகளை விலக்கும்; தரித்திரத்தைப் போக்கும். இல்லத்தில் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jQ4K9W
via IFTTT