மாசி சஷ்டி தினத்தில், வேல் கொண்டு நம்மைக் காத்தருளும் முருகக் கடவுளை வணங்குவோம். வேலுக்கு அரோகரா சொல்லி தரிசிப்போம். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வெற்றிக்குமரன். காலையும் மாலையும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் ஸ்கந்த குரு கவசம் கேட்பதும் இல்லத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதம் என்பது வழிபாடுகளுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது நம் பாவங்களையெல்லாம் போக்கும் மாதம். மாசி மகம் எனும் அற்புத வைபவமும் இந்த மாதத்தில் உண்டு. மாசி பெளர்ணமியும் விசேஷமானது. அதேபோல் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை, மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம். இரவில் கண்விழித்து வணங்குகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NtTwvV
via IFTTT