சென்னை: சென்னை ஈசிஆர் அருகே உள்ள இஸ்கான் கோயிலில் ராதாஷ்டமி விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் திவ்ய தோற்றத்தை கொண்டாடும் ராதாஷ்டமி விழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு ராதாஷ்டமி விழா இன்று (செப்.11) இஸ்கான் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், விழாவின் முக்கிய நிகழ்வாக, காலை 10.30 மணிக்கு கீர்த்தனை, 11.15 மணிக்கு உற்சவர் கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமாவுக்கு அபிஷேகம் ஆராதனை நடடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sJlQMrD
via IFTTT