பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாநாட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் கண்காட்சியை ஆகஸ்ட் 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று (ஆக. 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இசை நிகழ்ச்சிகள், இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி வரவேற்றார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி.சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கோவை கவுதார மடம் குமகுருபர சுவாமிகள், மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பு தலைவர் செங்கண் குமரா ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாநாடு விழா மலர் வெளியிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bAymO6e
via IFTTT